ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தின் சிறப்புகளை கேள்வி - பதில் வாயிலாக அறிவோம்.
கேள்வி:- மற்ற பஞ்சாங்கங்களைவிட ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தின் பொதுவான சிறப்பம்சங்கள் என்ன?
பதில்:- 1. மற்ற பஞ்சாங்கங்கள் சற்றேறக்குறைய 12 அங்குலத்துக்கு 10 அங்குல அளவில் 50 முதல் 100 பக்கங்களைக் கொண்டவையாக இருக்கின்றன,
அவற்றில் பல பக்கங்கள் விளம்பரம் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.
நமது பஞ்சாங்கம் 8 அங்குலத்துக்கு 5 அங்குலம் அளவில் வெறும் 24 பக்கங்களைக் கொண்டது
அட்டைகளில் மட்டும் 3 விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இதனால் கைக்கடக்கமாக இருப்பதால் மிகச் சுலபமாக கைப்பைக்குள் வைத்து எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்ல ஏதுவாகிறது.
2. மற்ற பஞ்சாங்கங்களில் ஜோதிடர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தேவையான ஒரு குடும்பஸ்தருக்குத்
தேவையே இல்லாத க்ரஹபாத சாரம், வருடம் முழுமைக்கான சந்த்ராஷ்டம தினங்களுக்கான பட்டியல் போன்ற விஷயங்கள்,
எல்லோருக்கும் அவ்வப்போது எளிதாகக் கிடைக்கக்கூடிய ராசி பலன் விஷயங்கள், ஆண்டு பலன்கள், எப்போதுமே மாறாத
விஷயங்களான திசா-புக்தி-அந்தர கணக்குகள், முஹூர்த்த நிர்ணய விஷயங்கள், சந்திர நிலைக் கட்டங்கள், ராஜா, மந்திரி
என ஆண்டு நவநாயகர் பலன்கள் என ஒரு முறைக்கு மேல் பயனில்லாத பல விஷயங்களைப் போட்டு பக்கங்களை நிரப்பியுள்ளனர்.
விஷயங்களான திசா-புக்தி-அந்தர கணக்குகள், முஹூர்த்த நிர்ணய விஷயங்கள், சந்திர நிலைக் கட்டங்கள், ராஜா, மந்திரி
என ஆண்டு நவநாயகர் பலன்கள் என ஒரு முறைக்கு மேல் பயனில்லாத பல விஷயங்களைப் போட்டு பக்கங்களை நிரப்பியுள்ளனர்.
ஆனால் நமது பஞ்சாங்கத்தில் அவசியம் அடிக்கடி பார்க்கவேண்டிய சில மாறாத விஷயங்கள் - ராகு காலம், எமகண்டம், தினப் பொருத்தப் பட்டியல்,
பஞ்சாங்கத்தை உபயோகித்து தகவலை அறியும் முறைபற்றிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்தும் ஒவ்வோர் ஆண்டும்
அந்தந்த ஆண்டுக்குறிய விஷயங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.
3. மிக மிக முக்கியமானது:- நமது பஞ்சாங்கத்தில் முற்றிலும் அனைத்துத் தகவல்களும் ஆங்கில மணி நிமிடங்களாக மட்டுமே வழங்க்ப்பட்டுள்ளன. ஏனெனில்
நாழிகைக் கணக்கில் (மணியாக மாற்றாமல்) நேரத்தை அறியக்கூடியவர்கள் 1 சதவீதம் பேர் கூட உலகில் இல்லை.
மற்ற பஞ்சாங்கங்களில் இன்றும் மணி - நிமிடமாக மாற்றாமல் நாழிகைகளிலேயே வழங்கப்பட்டு வந்தன. நமது பஞ்சாங்கம்
நாழிகைக் கணக்கில் (மணியாக மாற்றாமல்) நேரத்தை அறியக்கூடியவர்கள் 1 சதவீதம் பேர் கூட உலகில் இல்லை.
மற்ற பஞ்சாங்கங்களில் இன்றும் மணி - நிமிடமாக மாற்றாமல் நாழிகைகளிலேயே வழங்கப்பட்டு வந்தன. நமது பஞ்சாங்கம்
வெளியான பிறகு தற்போது சில பஞ்சாங்கங்கள் நாழிகையுடன் மணி-நிமிடத்தையும் சேர்த்து வழங்குகின்றன. இன்னமும் பழைய பிரபலமான பஞ்சாங்கம் ஒன்று நாழிகைகளில்தான் வெளியாகிறது. மணி நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ள பஞ்சாங்களில்கூட இரவு பகல் வேறுபாட்டை அறிய சரியான வழிமுறை பின்பற்றப்படாததால்
குழப்பம் நிலவுகிறது. காலை - மாலை - விடிகாலை - இரவு என்கிற பதங்களைக்கொண்டு வேறுபடுத்துகிறார்கள். இவற்றை கம்ப்யூட்டர் தானாக (ஆட்டோமேடிக்காக)
குறிப்பிட வழியில்லை. வேலைஆட்களைக்கொண்டு குறிக்கச்சொல்லும்போது மிகுந்த பிழை உள்ளதை அறிகிறேன். ஆனால் நமது பஞ்சாங்கத்தில் ஆட்டோமேடிக்காக
எழுதுவதற்காகவும், கால-மால - இரவு - விடிகாலை என்கிற குறிச்சொல் தேவையின்றி, 24 மணிநேர கடிகார முறையைப் பயன்படுத்துவதுடன், இரவு 12 மணியை 24 மணி என்றும், பின்னிரவில் வரும் நேரங்கள் என்பதை சுலபமாக அறிய இரவு 12 மணிக்குப் பிறகு, காலை 6 மணிக்கு முன்பாக உள்ள நேரங்களை முறையே,
25, 26, 27, 28, 29 என்ற எண்களால் ஆட்டோமேடிக்காகக் குறிப்பிடச் செய்கிறோம். இதில் குழப்பம் வருவதற்கு வாய்ப்பில்லை.
மேலும், மற்ற பஞ்சாங்கங்களில் காலை 6.15 மணிக்கு முடியும் திதி அல்லது நக்ஷத்திரத்தின் பெயரைக் கொடுத்து நேரம் கொடுத்து அடுத்த வரியில் (இடையில்)
அடுத்த திதி அல்லது நக்ஷத்திரத்தின் பெயர் மற்றும் நேரம் வழங்கியிருப்பார்கள். இது மிகச் சரியானதுதான், ஆனால், நடைமுறையில் இதைப் பயன்படுத்தும்
சாதாரண மனிதர்கள் குறிப்பிட்ட தேதிக்கு நேராக உள்ள திதி அல்லது நக்ஷத்திரத்தை மட்டுமே கவனித்துச் செயல்படுவார். இதைத் தவிர்க்க நமது பஞ்சாங்கத்தில்
அரை நாழிகைக்குக் குறைவாக உள்ள திதி அல்லது நக்ஷத்திரத்தின் நேரம் அடுத்து வருவதுடன் கூட்டப்பட்டு குறிப்பிடப்படும். இதனால் அரை நாழிகை பிழை
ஏற்பட வாய்ப்பு உள்ளதே என சிலர் எண்ணலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, ஏனெனில் முஹூர்த்தங்கள், அமாவாசை போன்ற தர்பண காலங்களில் மட்டுமே
மேற்படி சரியான திதி, நக்ஷத்திர விஷயங்கள் தேவைப்படுவதால், முஹூர்த்தங்கள், சங்கல்பங்களில் மிகத் துல்லியமாக நேரம் கண்கிடப்பட்டு, வேறுபடும்
நேரங்கள் தேவையான இடங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
4. நமது பஞ்சாங்கத்தில் முஹூர்தங்கள் உட்பட ஒரு மாதத்திற்கான அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் (வெவ்வேறு பக்கங்களில் தேடச் சொல்லாமல்) வழங்கப்பட்டுள்ளன.
5. எந்தப் பஞ்சாங்கமும் இன்னமும் நடைமுறைப்படுத்தாத ஒரு சிறப்பம்சம் - க்ருஷ்ண பக்ஷம் - சுக்ல பக்ஷத்தை சுலபமாக அறிய கருப்பு - வெள்ளை வண்ண வேறுபாடு செய்து காட்டப்பட்டுள்ளது. திதிக்கு அருகிலேயே ச்ராத்த திதியைக் கொடுத்துள்ளபடியால் ச்ராத்த திதியைத் தவறாக குறிக்க வாய்ப்பில்லை.
6. முஹூர்த்த தேதிகள் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
7. மாதப் பிறப்பு, அமாவாசை போன்ற புண்ணிய காலங்களுக்கு மிக அருகாமையிலோ, ஏகாதசி போன்ற வ்ரத தினங்களிலோ நமது பஞ்சாங்கத்தில்
முஹூர்த்தங்கள் வழங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், மிக முக்கியமான துருவம் உள்ளிட்ட பஞ்சக விதிகள், சிறந்த நக்ஷத்திர, சிறந்த லக்ன விதிகள், ஸ்தான சுத்த விதிகள் சரியாக அநுசரிக்கப்பட்டு முஹூர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
8. முக்கியமான விசேஷ தினங்களுக்கான படங்கள் சேர்கப்பட்டு அழகூட்டப்பட்டுள்ளது. மற்ற முக்கிய நிகழ்ச்சிகள் கவனத்தை ஈர்க்கும் வகைியல் பெரிய எழுத்தில் வழங்கப்பட்டுள்ளன.
9. மிக மிக முக்கியமாக, மிகச் சுலபமாக தேவையானவர்களின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தமான சிறந்த முஹூர்தங்களை உபயோகிப்பாளரே தேர்ந்தெடுத்துக்கொள்ளத்தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி:- மற்ற பஞ்சாங்களில் வழங்கப்பட்ட அவசியம் தேவைப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் நம் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளனவா?
பதில்:- அநேகமாக அவசியம் தேவையான அனைத்துத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இடப் பற்றாக்குறை காரணமாக, கரணத்திற்கான நேரம் மட்டும் வழங்க இயலவில்லை. ஆனால் நடைமுறையில் கரணத்திற்கான பயன்பாடு எதுவும் இல்லை.
ஏனெனில் ப்ரயோகங்களில் "சுப யோக சுப கரண" என்றுதான் குறிப்பிடுகிறோம். (அடியேன் மட்டும் யோக - கரணங்களின் பெயர்களை குறிப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளேன்.)
ஆங்கில வெளியீட்டில் கரணத்திற்கான நேரத்தையும் சேர்த்து வெளியிட உத்தேசித்துள்ளோம்.
தொடரும் ......
தங்கள் கேள்விகளை எழுதினால் - தொடர்ச்சியில் பதில் எழுத உதவியாக அமையும்.
நன்றியுடன்,
என்.வி.எஸ்



Dear bmbcAdmin,